Wednesday 11 December 2019

2019- Kaarthigai- Threhhold Kolam...

திருக்கார்த்திகை.
திருமகள் தேடி வரும் நேரம் திருவண்ணாமலையில் திக்கெட்டில் , சிவாலயங்களில்
வீடுகளில் , வீதிகளில்,
சிந்தையில்
சிந்தனைகளில்
ஒளிச்சுடரால் தோரணங்கள்
பதினாறு பேற்றினை முழக்கும் பேரணிகள்.
பேரிருளை விரட்டி அடிக்கும் போர்ப் படைகள்.
இதயத்தில் இன்பமாம் முழுநிலவின் உதயம்.
இறைவனின், இறைவியின்
ஆனந்த நடனம்.
அந்தக் கருணை விழிகள் திறந்ததால் ஒளியின் வெள்ளமோ!
மனித உள்ளங்களிலும் அந்தப் பாசமாம், நேசமாம்
ஒளிப் பூக்கள் மலருமோ!
ஒற்றுமையாம் ஒளிப்பந்தலின் கீழ்
ஒட்டுமொத்த மனித குலம் இளைப்பாறுமோ!
உணர்வுகளும், உரைகளும் ஒன்றுக்கொன்று
விளக்கேற்றிக் கொள்ளும் உன்னதமோ!
வானத்துச் சுடர்கள் வையத்துக்கு வந்து விடும்
வைபவமோ!
கார்த்திகைப் பொன்னொளியே
சரணம் சரணம்
ஜானகி ரமணன் புனே


















                         
                                                                                 

No comments:

Post a Comment