Sunday, 12 May 2019

2019- Mothers Day.- Ultrasound Rangoli....

அன்னையர் தின வாழ்த்ஆக்கள். 
எங்கள் உலகம் என்பது உன் ஆட்சி அல்லவா தாயே!
கட்டவிழும் புலன்களைக் கட்டியது உன் அன்புக் கட்டளைகள்.
உன் வரவுச் செலவுக் கணக்குகள் எங்களுக்கு வரவாகவே இருந்தது மாயம் .
அப்புறம் தான் தெரிந்தது, அவையெல்லாம் உன் த்யாகம் .
கடமைகள் பாலைவனம் இல்லை, சுகமான சோலைவனத்துக்குப் போட்டு வைத்த சுந்தரப் பாதைகள் என்பதை வரைந்து காட்டிய படம் நீ வாழ்ந்து காட்டிய பாடம் நீ.
த்ருப்தியை விஞ்சிய செல்வம் இல்லை என்பது நீ ஆணித்தரமாய் சொன்ன உண்மை.
உறவுகள் என்னும் பாலங்கள் தான் எங்கள் பலம் என்று உணர்த்தியவள்
அப்படி அன்பின் எல்லையை விரிவு படுத்திக் கொண்டே வந்து நிறுத்திய இடம், இறையன்பை உணர்த்திய உன்னதம்.
பிறகு எல்லாமே எளிதாகி விட்டது. 
எல்லாவற்றிலும் நம்பிக்கை பிறந்தது.
வண்ணக் கோலத்தில் தொடங்கி, விண்முட்டும் சாதனைகள் வரை ரசிக்கும் இயல்பே, இயல்பானது.
துன்பத்தடைகள் பலப்பல தோன்றினாலும்
அவற்றைக் கடக்க உன் எளிய வழிகளும், விழியின் மொழியுமே போதுமானதாய் இருந்தது.
உன் சொல்லின் கூர்மையெல்லாம் ரணசிகிச்சை
சொல்லாமற் சொன்னதைப் புரிந்து கொள்ளும் பக்குவமும் நீ தந்தது.
திரும்பிப் பாரக்கிறோம்.
எங்களுக்காக எத்தனை மலரத் தோட்டங்கள்.
எத்தனை இன்ப கீதங்கள்.
எத்தனை முழு நிலாக் காலங்கள்.
அத்தனைக்கும் நன்றி அம்மா...












Sunday, 14 April 2019

2019- Tamil New Year- Vishu....

தமிழெனும் அமிழ்தப் புத்தாண்டு :
சித்திரைப் பெண்ணாள் சிரித்து வருகின்றாள்.
அத்தனை சீரும், சிறப்பும்
குவிக்க வருகின்றாள்.
எததுணை எழிலாய் வாழ்க்கையின் வாசலில் இன்பக் கோலம் வரைய வருகின்றாள்!
அவள் வரும் இந்த இனிய நேரம் __ இத்தரை மேல் , இனிமேல் சொர்க்க சுகங்கள் தொடரட்டும்.
முத்துக் கடல் பொங்கி நீரை வானுக்கு அனுப்பட்டும்.
சுததமாய்க் கறுத்து மேகம், தருணத்தில் மழை பொழியட்டும்.
மொத்தமாய் ஏரி, குளங்கள் நிரம்பி வழியட்டும்.
புத்தம் புது பட்டாடையில் இயற்கை பொலியட்டும்
நித்தமும் நிலங்கள் வளங்கள் வழங்கட்டும்.
கத்தும் ஏழையின் வயிறு
உணவால் நிரம்பட்டும்,
கொத்து மலர்க் கூட்டமாய் இளைய தலைமுறை புத்தொளி பரப்பட்டும்.
சத்துணவாய் ஆன்மீகம் மனதுக்கு உரமாகட்டும்
பக்தர்க்கு இரங்கி இறைவன் வரங்கள் தந்து வாழ்த்தட்டும்.
இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.....
வணக்கத்துடன் ஜானகி ரமணன் புனே...
---------------------------------------------------------------------------------------------------------------------------
முகாரியின் நித்திரை முடித்துவிகாரியின் விடியலில்விழித்தோம்.உலகின் முதல் மொழியானபொது மொழியானசெம்மொழி த் தமிழ்புத்தாண்டில் அடியெடுத்து வைத்தசித்திரை மகளே வருக.பண்பாடு போற்றும்பவித்ரம் பலவும் தருக.சித்திரைத் திருமகளே!எத்திசையும் வளம் பெருக்கிவற்றாத செல்வத்தோடுமன உறுதியை சேர்த்துமக்கள் மகிழ தொழில் வளம் பெருகிமகிழ்வான வாழ்வு சிறக்கஅருள் புரிவாய் திருவருளேஇத் தமிழ் புத்தாண்டில்.அறுமுகனின் அருளால்அரிதாகக் கிடைத்தஅருணகிரி குழுமஅன்பர்களுக்குஅனைத்து சௌபாக்கியங்களும்தந்து அருள் புரிவாயே.....